"வீரப்பன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு": மேட்டூரில் திடீர் துண்டு பிரசுரங்கள்
மேட்டூர்:
வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசளிக்கப்படும்என்று தமிழக-கர்நாடக அரசுகளின் பெயரில் மேட்டூர் மற்றும் கொளத்தூரில் பல இடங்களில் துண்டுப் பிரசுரங்கள்ஒட்டப்பட்டுள்ளன.
பல வண்ணங்களில் தயாராகியுள்ள இந்தத் துண்டுப் பிரசுரங்கள் மேட்டூர் மற்றும் கொளத்தூர் ஆகிய பகுதிகளில்நேற்று திடீரென்று ஒட்டப்பட்டிருந்தன.
"தமிழக-கர்நாடக அரசுகள் ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு" என்ற தலைப்பில் அச்சிடப்பட்டுள்ள இந்தத் துண்டுப்பிரசுரத்தில், "வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகளைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு சன்மானம்" என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வாசகங்களுக்குக் கீழே வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன் மற்றும் சந்திரகவுட ஆகியோரின்புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
இவற்றுக்குக் கீழே "தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: சத்தி கேம்ப் - 04295 22600, 24111,25111, அந்தியூர் கேம்ப் - 04256 51443, 62030, மேட்டூர் கேம்ப் - 04298 344525 மற்றும் கோவை - 0422606866" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேட்டூரிலும் கொளத்தூரிலும் மக்கள் கூடும் முக்கியமான இடங்களான பஸ் நிலையம், பஸ்கள் உள்பட பலஇடங்களில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிரடிப்படையினரின் உதவியுடன் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டனவா அல்லது வேறு யாரும்ஒட்டியுள்ளனரா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.