"சும்மா" சண்டையில் ஒருவர் அடித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் சைக்கிளில் வந்த இருவர் மோதிக் கொண்டனர். அதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார்.

ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ். இவர் நம்மாழ்வார்ப்பேட்டை பகுதியில் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தார். அப்போது சேகர் என்பவர் அந்தப் பக்கம் சைக்கிளில் வந்துள்ளார். இருவரது சைக்கிள்களும்எதிர்பாராமல் மோதிக் கொண்டன.

உடனே சைக்கிளை விட்டு இறங்கிய சேகர், இருதயராஜுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம்முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

இதில் இருதயராஜ் கடுமையாக தாக்கப்பட்டார். பலத்த அடிபட்ட அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காது இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+