ஆண்டவன் பெயரில் பதவியேற்றார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் மூன்றாவது முதல்வராக இன்று பதவியேற்றார் ஜெயலலிதா.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நடந்த மண்டபத்தில் இந்த நிகழ்ச்சிநடந்தது. முன்னதாக இங்கு வந்த ஆளுநர் ராம் மோகன் ராவை ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் தன்னுடன் பதவியேற்கவுள்ள அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ராம்மோகன் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட தமிழிலேயே பதவிப் பிரமாணம் செய்து வைத்து அனைவரையும்ஆச்சரியப்படுத்தினார் ஆளுநர் ராம் மோகன் ராவ்.
பின்னர் பதவிப் பிரமாணத்திலும், ரகசியக் காப்புப் பிரமாணத்திலும் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
இதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் வாழ்த்துத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications