ஜெ. பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை:
ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் சட்டசபை திமுக எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன், சென்னை மேயர்ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்தமுறை அவர் முதல்வரானபோது மேயராக இருந்த ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதைஸ்டாலினே நிருபர்களிடம் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந் நிலையில் இம்முறை பதவியேற்பு விழாவுக்கு அவருக்கு அரசின் சார்பில் முறைப்படி அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அவரும் அதை ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
முக்கியப் பிரமுகர்கள் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்த ஸ்டாலினும் அன்பழகனும் யாருடனும் பேசவில்லை.
ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்து வரும் ப.சிதம்பரத்தின் கட்சியில் உள்ள அவரது தீவிரமானஆதரவாளரான புரசைவாக்கம் ரங்கரகாஜனும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஸ்டாலினுக்கு அருகில் அவர்அமர வைக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த முறை ஜெயலலிதா முதல்வரானவுடன் கைது செய்யப்பட்டவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரசில் சமீபத்தில் இணைந்த வாழப்பாடி ராமமூர்த்தியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், அவரது கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோவன் இந் நிகழ்ச்சியில்பங்கேற்கவில்லை.
மதிமுக தலைவர் வைகோவும் இந் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications