For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

330 பேர் படுகொலை: இந்தியாவின் பெயர் நாசமாகிவிட்டது-வாஜ்பாய்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

குஜராத்தில் நடந்த படுகொலைகளால் இந்தியாவின் இமேஜ் பாழாகி விட்டதாக பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.

அயோத்தி விவகாரம் தொடர்பாக ரயில் எரிக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத்தில் நடந்த வன்முறையில் 330க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து வாஜ்பாய் கூறியதாவது:

குஜராத்தில் நடந்த வன்முறையில் ஏற்பட்ட படுகொலைகளால் இந்தியாவின் இமேஜே பாழாகி விட்டது. உலகமக்களின் முன்னால் இந்தியாவுக்கு நற்பெயர் குலைந்து விட்டது.

நாட்டு மக்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று வாஜ்பாய் கூறினார்.

தேவ கெளடா புகார்:

குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீது குஜராத் பா.ஜ.க. அரசே நடத்திய வன்முறைதான் இது. எனவே குஜராத் அரசைகலைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.

இந் நிலையில் அயோத்தி விவகாரம் குறித்து இஸ்லாமிய சட்ட வாரியம், மில்லி கவுன்சில் போன்ற முஸ்லிம்அமைப்புகளின் முக்கிய தலைவர்களையும், சங்கராச்சாரியார் போன்ற இந்து மதத் தலைவர்களையும் அழைத்துபேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வாஜ்பாயிடம் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X