லாரி ஏறியதில் சாலையோரம் படுத்திருந்த 3 பேர் பலி
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது லாரி ஏறியதில்3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரையில் சாலையோரத்தில் சிலர் குடிசை அமைத்து இரும்புவியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் எப்போதும் இரவு நேரத்தில் சாலையோரம் படுப்பது வழக்கம்.
நேற்றிரவும் இதேபோல் சாலையோரம் படுத்திருந்தனர். இன்று அதிகாலை அந்த வழியாக வந்த ஒரு லாரிசாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏறியது.
இந்த விபத்தில் அந்த இடத்திலேயே 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர்தேனி மற்றும் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல் நிலைக்கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications