நாடு முழுவதும் 2 நாள் துக்கம் - நாளை உடல் தகனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஹெலிகாப்டர் விபத்தில் பாலயோகி மரணமடைந்ததையடுத்து நாடு முழுவதும் 2 நாள் துக்கம்கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி இன்றும் நாளையும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்.
மேலும் இந்த 2 நாட்களிலும் எந்த அரசு நிகழ்ச்சியும் நடைபெறாது என்று மத்திய உள்துறை அமைச்சகம்கூறியுள்ளது.
தற்போது ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாலயோகியின் உடல்பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை முழு அரசு மரியாதையுடன் பாலயோகியின் உடல் அவருடைய சொந்த ஊரான ஆந்திராவில் உள்ளஅமலாபுரத்தில் தகனம் செய்யப்படுகிறது.
பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பாலயோகியின்இறுதிச் சடங்கில் கலந்த கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications