நிதி நெருக்கடியை நீக்குவதே என் முதல் பணி: ஜெ.
சென்னை:
நிதி நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்பதே எனது முதல் பணி என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
கோட்டையில் நேற்று (சனிக்கிழமை) முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா பின்னர் மாலையில் நிருபர்களைசந்தித்த போது கூறியதாவது:
என்னுடைய முதல் பணி நிதி நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். தமிழகத்தை எல்லா துறையிலும்முன்னேற்றமடையச் செய்ய வேண்டும். நிதி நிலையை எப்படி சீர் செய்ய போகிறேன் என்பதை நிதி நிலைஅறிக்கை தாக்கல் செய்யும் போது தெரிந்து கொள்ளலாம்.
ஊழலற்ற, வெளிப்படையாக செயல்படும் அரசாக என்னுடைய அரசு இருக்கும்.
இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பதவியேற்பு விழாவுக்கு, மேயர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர்அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எனது நன்றி.
யாரையும் பழி வாங்கும் நோக்கம் எனக்கு இல்லை. அதே நேரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்அவர்கள் மீது நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார்.
3வது முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதா முதன் முதலாக 3 பைல்களில் கையெழுத்திட்டார்.
இதில் முதலாவதாக சென்னையைத் தவிர்த்து மற்ற 29 மாவட்டங்களில் ஊரக கூட்டுக் குடிநீர் திட்டம், ஊட்டச்சத்துகுறைவான குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து திட்டம் மற்றும் வரும் 9ம் தேதி கவர்னர் உரை அறிவிப்புபோன்றவற்றில் கையொப்பமிட்டார்.












Click it and Unblock the Notifications