இந்தியாவின் புதிய உளவுப் பிரிவு டி.ஐ.ஏ.
டெல்லி:
டி.ஐ.ஏ. என்ற புதிய உளவுப் பிரிவை இந்தியா உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே உள் நாட்டு உளவுப் பிரிவாக இன்டலிஜென்ஸ் பீரோ, (ஐ.பி.), வெளிநாட்டு உளவுப்பிரிவாக ரிசர்ச் அன்ட் அனாலிஸ் விங் (ரா) ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இப்போது புதிதாக பாதுகாப்புத்துறை உளவுப் பிரிவாக டி.ஐ.ஏ. (டிபென்ஸ் இன்டலிஜென்ஸ் ஏஜென்சி)உருவாக்கப்பட்டுள்ளது.
ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் உளவுப் பிரிவுகளை ஒருங்கிணைந்து இந்த அமைப்புஉருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் டைரக்டர் ஜெனராக லெப்டினன்ட் ஜெனரல் கமல் தாவர்நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய உளவுப் பிரிவுக்கு ஏகப்பட்ட நிதியும், நவீன கருவிகளும் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
செயற்கைக் கோள்களைக் கொண்டு உளவு பார்த்தல் போன்ற ஹை-டெக் பணிகளிலும் இந்தப் பிரிவு ஈடுபடும்.
இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தாவர் ராணுவத்தின் கவச வாகனப் படையில் அதிகாரியாக இருந்தவர்.உளவு பார்த்தலில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசகராகவும் இவர்செயல்படவுள்ளார்.












Click it and Unblock the Notifications