அமைச்சர் சரோஜா நீக்கம்: கிராமமே கொண்டாட்டம்
திருச்சி:
அமைச்சர் பதவியிலிருந்து சரோஜா நீக்கம் செய்யப்பட்டதால், அவருடைய கிராம மக்கள் அம்மனுக்கு படையல்வைத்து மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே டி.முருகப்பட்டி உள்ளது. இது முன்னாள் அமைச்சர் சரோஜாவின்சொந்த கிராமம்.
முதன் முதலில் சரோஜா அமைச்சராகி இந்த கிராமத்திற்கு வந்த போது இந்த கிராம மக்கள் பூர்ண கும்ப மரியாதைசெய்தனர். ஆனால் இதன் பிறகு சரோஜாவின் மகன் சுரேஷ்காந்தி, அடியாட்களை வைத்து கொண்டு கிராமத்தில்அராஜகம் செய்ய ஆரம்பித்தார்.
அவருடைய கேபிள் டிவி அறை தீப்பிடித்த விவகாரத்தில் 8 பேரை கைது செய்ய வைத்தார். இது அந்தமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உண்மை குற்றவாளியை விட்டுவிட்டு அப்பாவிகளை கைதுசெய்ததாக மக்கள் குற்றம் சாட்டினர்.
கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பையும் தெரிவித்தனர்.இந்நிலையில் ஜெயலலிதா, சரோஜாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்ககினார்.
இதை கிராம மக்கள் பண்டிகையை போல் உற்சாகமாக கொண்டாடினர்.
5,000, 10,000 வாலா சர வெடிகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முருங்கப்பட்டி, மங்கப்பட்டி, தளுகை, பாதர்பேட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், முருகப்பட்டிமாரியம்மன் கோவிலில் திங்கள்கிழமை கூடினர். சரோஜா பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு நன்றியாக அம்மனுக்குபொங்கல் வைத்து படையலிட்டனர்.
பின்னர் அனைவருக்கும் சுண்டல் விநியோகிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்தேசம் கட்சியின் மாநிலஅமைப்பாளர் ஆனந்த் செய்திருந்தார்.