யாகவா முனிவரின் பிறந்த நாள் விழாவில் நடிகர் செந்தில்
சென்னை:
கொக்கு, மரம், அனில் போன்ற விலங்குகளுடன் ஏதோ ஒரு புரியாத பாஷையில் பேசி வந்த யாகவா முனிவரின் 62-வது பிறந்தநாள் விழா சென்னையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நடிகர் செந்தில் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பறவை பாஷையில் பேசுவதாகக் கூறிக் கொண்டு புரியாத வார்த்தைகளால் ஏதேதோ பேசி அதற்கு தமிழில் விளக்கம் கொடுத்துவந்தார் யாகவா. நான் 4,000 வருசமாச்சு இந்த பூமிக்கு வந்து என்றெல்லாம் கூறி மிரட்டியவர். தன் சக சாமியாரான சிவசங்கர்பாபாவுடன் டிவியில்ஒத்தைக்கு ஒத்தை மோதி பரபரப்பை ஏற்படுத்தியவர் யாகவா முனிவர்.
இவர் மறைந்து விட்டார். அவரது 62-வது பிறந்த திாள் விழா, அவர் வாழ்ந்த சென்னை வேளச்சேரி-தாம்பரம் சாலையில் உள்ளஅவரது வீட்டில் கொண்டாடப்பட்டது.
நடிகர் செந்தில், விஜிபி நிறுவன அதிபர் சந்தோஷம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
வலம்புரிஜான் தலைமையில் பட்டிமன்றமும் நடந்தது. நிகழ்ச்சியில் யாகவாவின் படமும் திறக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications