கருணாநிதியைத் தாக்கி அறிக்கையா?: ஜெவுக்கு அன்பழகன் கண்டனம்
சென்னை:
கருணாநிதியை வசைபாடி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பது தமிழகத்தையும், தமிழக மக்களையும்இழிவுபடுத்தும் செயல் என சட்டமன்ற திமுக தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.
இது குறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா பதவியேற்புக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அழைப்பு கிடைக்கவில்லை. எதிர்கட்சிதலைவரான எனக்கும் 6வது வரிசையில் இடம் ஒதுக்கியிருந்தனர். அப்போது திமுகவினரிடையே ஸ்டாலினும்,நானும் கலந்து கொள்ள வேண்டுமா என்று கேள்வி எழுந்தது.
ஆனால், எங்கள் இருவரையும் கண்டிப்பாக போக வேண்டும் என்று வற்புறுத்தியவரே கருணாநிதி தான்.
சட்டமன்ற ஜனநாயக நாகரீகத்தின்படி எதிர்கட்சி தலைவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்காததுகண்டனத்திறக்குரியது. இது குறித்து பல கட்சியினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
அழைப்பு வரவில்லை என்று கருணாநிதி கூறியதற்கு, அவர் மீது வசைபாடி ஜெயலலிதா அறிக்கைவெளியிட்டிருப்பது, தமிழகத்தையும், தமிழக மக்களையும் இழிவுபடுத்தும் செயலாகும் என அன்பழகன்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications