நெய்வேலி மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடித்தது: மின் உற்பத்தி பாதிப்பு
நெய்வேலி:
நெய்வேலி மின் உற்பத்தி நிலையத்தில் மிகப் பெரிய பாய்லர் வெடித்துச் சிதறியது. இதனால் ஒரு பிரிவில் மின்உற்பத்தி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதில் இரண்டாவது நிலையத்தில் உள்ள 6வது பிரிவின்பாய்லர் அதிகாலையில் வெடித்துச் சிதறியது.
இது குறித்து மின் உற்பத்தி நிலையத்தின் கண்காணிப்பாளர் செளந்தரராஜன் கூறுகையில்,
அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. லிக்னைட் நிலக்கரியைக் கொண்டு எரிக்கப்படும் பாய்லர் இது. 210மெகாவாட் திறன் கொண்டது. நாட்டிலேயே இங்கு மட்டும் தான் இது போன்ற பாய்லர் உள்ளது.
இந்த விபத்தினால் 6வது பிரிவில் மட்டும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் நெய்வேலி நிலக்கரிக் கழகத்தின் இயக்குனர் (மின் உற்பத்திப் பிரிவு)பாலசுப்பிரமணியம் விரைந்து வந்து பாய்லரை பார்வையிட்டார். சேதத்தின் மதிப்பு குறித்து அளவிடப்பட்டுவருகிறது.
இந்த மின் உற்பத்தி நிலையத்தில் மொத்தம் 7 பிரிவுகள் உள்ளன.












Click it and Unblock the Notifications