தேவைப்பட்டால் ஜெயலலிதாவை சந்திப்பேன்: ஸ்டாலின்
சென்னை:
சென்னை நகர வளர்ச்சிப் பணிகளுக்காக தேவைப்பட்டால் முதல்வரை சந்திக்கவும் தயங்கமாட்டேன் என்று மேயர்ஸ்டாலின் கூறினார்.
இன்று காலை சென்னை மாநகராட்சியில் 2002-2003க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையைபடித்து முடித்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புதிய பட்ஜெட்டில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் புதிய திட்டங்களை விட, முன்பேஅறிவிக்கப்பட்ட பழைய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
சொத்து வரி உட்பட வருவாயை பெருக்கும் பல வரிகளை வசூலிக்க மாநகராட்சி தீவிரமாக ஈடுபடும்.
திட்டங்களை செயல்படுத்தவோ, மாநகராட்சி நிதி ஒதுக்குவது குறித்தோ, முதல்வரை சந்தித்து அனுமதி வாங்கும்நிலை ஏற்பட்டால், தயங்காமல் முதல்வரை சந்திப்பேன்.
சென்னையை, சிங்காரச் சென்னையாக்கும் திட்டம் ஏறக்குறைய 85 சதவிகிதம் முடிந்து விட்டது. சிங்காரச்சென்னையாக்கும் திட்டம் முழு மூச்சுடன் 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டும். அதன் பின்னர் சென்னை 100 சதவீதம்சிங்காரச் சென்னையாகிவிடும்.
சென்னையில் திமுக ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலங்கள் கட்டும் பணி ரத்து செய்யப்படவில்லை.சிறிது காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார் ஸ்டாலின்.