சங்கராச்சாரியார் மூலம் தீர்வு காண்பது நாட்டுக்கு நல்லதல்ல- சுவாமி
சென்னை:
அயோத்திப் பிரச்சனையைத் தீர்க்க காஞ்சி சங்கராச்சாரியாரை ஈடுபடுத்துவதன் மூலம் நாட்டின் சட்டம், நீதிக்குமத்திய அரசு ஆபத்தை விளைவித்துள்ளது என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பிரச்சனை சட்டரீதியில் அனுகப்பட வேண்டிய ஒன்று. இதில்சங்கராச்சாரியாரை ஈடுபடுதுவது நியாயமல்ல. நாட்டின் அரசியல் சட்டம், மதசார்பின்மை, நீதி ஆகியவற்றுக்குஇதன் முலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சட்டம் பெரியதா, இல்லை ஒரு கும்பல் (பாபர் மசூதியை இடித்தவர்கள்) பெரியதா என்பது தான் கேள்வியே.
நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கும் விஷய்ததில் ஏற்கனவே வி.எச்.பி. இரண்டு முறை தனது உறுதி மொழியில் இருந்து பின்வாங்கியுள்ளது. இப்போது அவர்களிடம் கோவில் கட்ட இடம் தருவது என்பது அங்கு வேறு எந்த கட்டடமும் கட்டமுடியாது என்பதாகத் தான் அர்த்தம்.
சட்டப்படி தங்களுக்கு முழு உரிமை கேட்க வேண்டிய இஸ்லாமிய அமைப்புகள் இந்த மதவாதிகளிடம்சரணடைந்தது கவலை தருகிறது.
இவ்வாறு சுவாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.