காஞ்சி சுவாமிகளிடம் உறுதிமொழி தரவில்லை: வி.எச்.பி பல்டி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் பணியும் என காஞ்சி சங்கராச்சாரியார்கூறியுள்ள நிலையில், அப்படி ஏதும் உறுதிமொழி தரவில்லை என அந்த அமைப்பு பல்டி அடித்துள்ளது.

இந்த உறுதிமொழியை அடிப்படையாக வைத்துத் தான் அயோத்தியில் பிரச்சனைக்குள்ளாகாத இடத்தில் கோவில்கட்ட முஸ்லீம்களிடம் அனுமதி கேட்டார் சங்கராச்சாரியார்.

வி.எச்.பி. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கத் தயாராக இருப்பதால் அருகில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிப்பதாகஇஸ்லாமிய சட்ட வாரியமும் கூறியது.

இந் நிலையில் நாங்கள் நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்படுவதாக எந்த உறுதிமொழியும் தரவில்லை என தரவில்லை எனவி.எச்.பி. இன்று அறிவித்துள்ளது. அதன் துணைத் தலைவர் ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் கூறுகையில்,

நாங்களோ, ராமஜென்ம பூமி அறக்கட்டளையோ அப்படிப்பட்ட உறுதிமொழியைத் தரவில்லை. இடிப்பட்டகட்டடம் இருந்த இடத்தில் பாபர் மசூதியைத் திரும்பக் கட்ட அனுமதிக்க மாட்டோம். ராமர் கோவில் தான்கட்டப்படும். நீதிமன்றம் முஸ்லீம்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்க முடியாது. வரலாற்றுக்கு எதிராக தீர்ப்பளிக்கமுடியாது.

15ம் தேதி நாங்கள் சொன்ன இடத்தில் திட்டமிட்டபடி கோவில் கட்டும் பணி தொடங்குவோம். 12ம் தேதிக்குள்அதற்கான அனுமதியை அரசிடம் இருந்து பெற முயல்வோம். நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்துகரசேவகர்களை வரச் சொல்லிவிட்டோம். அவர்களை தடுத்தால் தடுக்கப்பட்ட இடத்தையே அயோத்தியாக மாற்றச்சொல்லியிருக்கிறோம்.

அயோத்தியில் ராமர் கோவில் இடத்தைச் சுற்றி 12 கி.மீ. தூரத்தில் எந்த மசூதியும் கட்ட அனுமதிக்க மாட்டோம்.ஏற்கனவே அயோத்தியில் கட்டப்பட்டுள்ள மசூதிகள் ஆட்கள் இல்லாமல் காலியாகக் கிடக்கின்றன என்றார்.

அத்வானி பதவி விலக வேண்டும்:

இந் நிலையில் குஜராத்தில் கலவரத்தை வளர விட்ட மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியும், கலவரத்தைவேண்டுமென்றே தடுக்காமல் விட்ட அம்மாநில பா.ஜ.க. முதல்வரும் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூறியுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் இல்லத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது. இதன பின்னர் நிருபர்களிடம் சாட்டர்ஜி கூறுகையில், குஜராத்தில் வன்முறைதொடர்ந்து கொண்டிருப்பது பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. உள்துறை அமைச்சகமும் மாநில அரசும்சேர்ந்து தான் இந்த வன்முறையை திட்டமிட்டு வளர்த்து வருகின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மதசார்பற்ற கட்சிகள் உடனடியாக அக் கூட்டணியை விட்டு வெளியேறவேண்டும்.

எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் முன் நாளை போராட்டம் நடத்துவோம்.

அயோத்தி விவகாரத்தில் அரசியல் சாதுக்களை விட்டு பிரச்சனையை கையாள முயல்கிறது மத்திய அரசு என்றார்.

எதிர்க் கட்சிகளின் இந்த முடிவால் நாளை நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கும் என்று தெரிகிறது.

நாடகம் நடக்கிறது:

இந் நிலையில் குஜராத் வன்முறையில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டதை திசை திருப்புவதற்காக அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தை,சமரசம் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது என டெல்லி ஜூம்மா மசூதியின தலைவர் புகாரி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதன்மூலம் குஜராத் வன்முறையை பிரதமர் திசை திருப்பி வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பே வி.எச்.பியின் கோவில்கட்டும் திட்டம் குறித்து எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மத்திய அரசு இப்போது ஏன் இந்தப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது போல நடிக்க வேணடும்?

என்னிடமும் காஞ்சி சங்கராச்சாரியார் இன்று பேசினார். பிரச்சனை தீர ஆதரவு கேட்டார். குஜராத் வன்முறையில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட உயிர், பொருள்இழப்புக்கு பதில் சொல்வதாக இருந்தால் நானும் ஆதரவு தருவதாகக் கூறிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+