நான் திருடனா?: மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை
சென்னை:
வாட்ச் திருடியதாக கூறியதால் அவமானமுற்ற இளைஞர் 3-வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பலமாடி வணிக வளாகத்தில் உள்ள ஒரு வாட்ச் கடையில் வேலை பார்த்து வந்தவர் மாறன். இவர்மயிலாப்பூரைச் சேர்ந்தவர்.
வாட்சுக்களை சுத்தம் செய்து வைக்கும் வேலையில் மாறன் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடையில் இருந்த ஒரு வாட்ச்சைக்காணவில்லை. இந்த வாட்ச் காணாமல் போனது தொடர்பாக மாறனிடம் கடையின் மேலாளர் மற்றும் 2 ஊழியர்கள் விசாரணை நடத்தினர்.வாட்ச்சை நான் எடுக்கவில்லை என்று மாறன் கூறியதாகத் தெரிகிறது.
இருப்பினும் மாறனை 3-வது மாடிக்குக் கொண்டு சென்று தனி அறையில் வைத்து 3 பேரும் விசாரித்தாகத் தெரிகிறது. அப்போது திடீரென3-வது மாடி ஜன்னல் கதவை உடைத்துக் கொண்டு மாறன் கீழே குதித்தார். இதில் தலையில் அடிபட்டு அங்கேயே இறந்தார்.
இந்த சம்பவம் குறித்துத் தற்கொலைக்குத் தூண்டியதாக வாட்ச் கடை மேலாளர் பிரகாஷ் மற்றும் 2 ஊழியர்களைப் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications