கலாம், கங்குலியைக் கொல்ல தீவிரவாதிகள் திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவின் பாதுகாப்பு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம், கிரிக்கெட் அணியில் கேப்டன் சவுரவ் கங்குலி,தெண்டுல்கர் ஆகியோர் தீவிரவாதிகளின் ஹிட்-லிஸ்டில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மூவருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உளவுப் பிரிவுகள் தந்துள்ள தகவலின்படி இந்த மூவரையும் கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டுருப்பதுஉறுதியாகியுள்ளது என மத்திய உள்துறை இணையமைச்சர் வித்யாசாகர் ராவ் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் வசித்து வரும் மாநிலங்களின் அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனைநடத்தி பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications