For Quick Alerts
For Daily Alerts
Just In
நாகர்கோவிலில் வெடிகுண்டு வீச்சு: 2 பேர் கைது
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே 10 ரூபாய்க்கு வெடிகுண்டு வாங்கி வீடு மீது வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் அருகே உள்ளது தெங்கம்புதூர். இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு வீடு மீது திடீரென வெடிகுண்டு வந்துவிழுந்து வெடித்தது.
ஆனால் நல்லவேளையாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் தெரிவிக்கையில், அந்தவெடிகுண்டை பத்து ரூபாய் கொடுத்து ஒருவரிடமிருந்து வாங்கியதாகக் கூறினர்.
இதையடுத்து வெடிகுண்டு விற்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டதாகத் தெரிகிறது.
Comments
Story first published: Friday, March 8, 2002, 5:30 [IST]