அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகம்: பட்டியலிடுகிறார் கருணாநிதி
சென்னை:
கடந்த 9 மாத அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்புச் சம்பவங்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த மே மாதம் அதிமுக பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்புசம்பவங்களை நான் கடந்த பிப்ரவரி 5ம் தேதியே பட்டியலிட்டுக் காட்டியுள்ளேன்.
அதன்படி இந்த 10 மாதங்களில் 66 கொலைகள், 97 கொள்ளைகள், 4 கற்பழிப்பு உள்பட நடந்த பல சம்பவங்களில்113 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவை தவிர தமிழகம் முழுவதும் 136 விபத்துக்களும் நடந்துள்ளன. மொத்தத்தில் இதுபோன்ற சம்பவங்களில் 354பேர் இறந்துள்ளனர்.
ஜெயலலிதாவைப் பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்பதற்காக நான் இந்தப் பட்டியலைக் கொடுக்கவில்லை.
இந்தப் பட்டியலைப் பார்த்த பிறகாவது அதிகாரவர்க்கத்தினரும் ஆட்சியில் இருப்பவர்களும் இனிமேல்இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் கட்டுப்படுத்த வேண்டும்.
அவர்கள் இனிமேலாவது பொதுமக்கள் மேல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதற்காகவேஇப்பட்டியலை வெளியிட்டுள்ளேன் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.