For Daily Alerts
Just In
சட்டசபை கூடுகிறது: எம்.எல்.ஏக்களுடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கூடவுள்ளதையடுத்து அதில் திமுக எப்படி நடந்து கொள்வது என்பது குறித்துதனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் கருணாநிதி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
சனிக்கிழமை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடக்கிறது. காலை 9 மணிமுதல் பகல் வரை இக் கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.
மேலும் சட்டமன்றக் கூட்டத்துக்கு இந்தமுறையும் கருணாநிதி வராவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளிலும்ஜெயலலிதா ஈடுபடுவார் என்று தெரிகிறது. இதையடுத்து அதை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்தும் இக் கூட்டத்தில்விவாதிக்கப்படும்.
திமுகவுக்கு மொத்தம் 27 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
Comments
Story first published: Friday, March 8, 2002, 5:30 [IST]