திருமாவளவனிடம் ஆதரவு கேட்ட கருணாநிதி
சென்னை:
நான் திமுக அணியிலும் இல்லை, அதிமுக அணியிலும் இல்லை. ஆனால், முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலலிதாவை வாழ்த்துகிறேன்என்று விடுதலைச் சிறுத்தைகள் அணியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
நாங்கள் இப்போது எந்த அணியிலும் இல்லை. தனித்தே இயங்குகிறோம். சட்டசபையிலும் அப்படியே செயல்படுவோம். ராஜ்யசபாதேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு திமுக தலைவர் கருணாநிதி கோயுள்ளார். அவருக்கு சாதகமான பதிலையேதந்துள்ளேன்.
தமிழகத்தை முதன்மையான மாநலமாக மாற்றுவேன் என்று கூறியுள்ள ஜெயலலிதாவின் உறுதியைப் பாராட்டுகிறேன். முதல்வராகப்பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சிக்காலத்தில் 4 தலித்கள் அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் போன்ற உயர் பதவிகளை வகித்தனர். ஆனால் இப்போது அது3 ஆகக் குறைந்துவிட்டது. இதை 5 ஆக உயர்த்த ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications