விடுதலைப்புலிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
கொழும்பு:
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் மீறக் கூடாது என்று அமெரிக்காஎச்சரித்துள்ளது.
இதன் காரணமாக விடுதலைப்புலிகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வாழும் தமிழர்கள் மீது இருந்த பல தடைகளைஇலங்கை அரசு நீக்கியுள்ளது. இதனால் இலங்கையில் விரைவில் நிரந்தர அமைதி ஏற்படும் என்று அனைத்துநாடுகளும் நம்புகின்றன.
இதற்கிடையில் இலங்கையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் மீறக் கூடாது என்று இலங்கையில்உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை சாதகமாகப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கடத்துவதாகஎங்களுக்கு நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால்அமைதி பேச்சுவார்த்தை தடைபடும்.
தற்போது அனைத்து நாடுகளிலும் தீவிரவாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு போர்நிறுத்தஒப்பந்தத்தை மீறாத வகையில் விடுதலைப்புலிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இரு தரப்பினருமே ஒப்பந்தத்தை மீறாதவாறு நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நிரந்தரமாகஇலங்கையில் அமைதி ஏற்படும்.
இலங்கையில் அமைதியேற்பட வேண்டும் என்று விடுதலைப்புலிகள் விரும்பினால் தீவிரவாதத்தை கைவிடவேண்டும். விடுதலைப்புலிகள் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையையும் விட்டுத் தர வேண்டும் என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications