இமாம் அலியை தேடி நாகர்கோவில்-மும்பை ரயிலில் போலீசார் அதிரடி சோதனை
திண்டுக்கல்:
கடந்த வாரம் மதுரை அருகே தப்பிய அல்-உம்மா கைதிகளில் ஒருவனான இமாம் அலி, நாகர்கோவில்-மும்பைஎக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பிச் செல்வதாக வந்த தகவலையடுத்து இன்று (திங்கள்கிழமை) திண்டுக்கல் ரயில்நிலையத்திற்கு வந்த அந்த ரயிலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் ஹைதர்அலி மற்றும் இமாம் அலி ஆகிய அல்-உம்மா கைதிகளை சில நபர்கள் வந்து கடத்திச் சென்றனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை சிவகங்கையில் ஹைதர் அலி மட்டும் போலீசாரிடம் பிடிபட்டான்.
ஆனால் இன்னும் சிக்காமல் இருக்கும் இமாம் அலியைத் தேடும் பணியில் தமிழக போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். மதுரையில் பொது இடங்களில் எல்லாம் இமாம் அலியின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் இமாம் அலி மும்பைக்குத் தப்பிச் செல்லத்திட்டமிட்டிருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து இன்று நண்பகல் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த நாகர்கோவில்-மும்பை ரயிலில்போலீசார் திடீரெனப் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியாகச் சோதனை மேற்கொண்டபோதிலும், அதில் இமாம் அலி வரவில்லை என்றுஅறிந்ததும் போலீசார் ஏமாந்தனர்.
போலீசார் நடத்திய இந்தத் திடீர்ச் சோதனையால் திண்டுக்கல் ரயில் நிலையம் பெரும் பரபரப்புக்குள்ளானது.












Click it and Unblock the Notifications