போட்டோவுக்காக போராட்டம் நடத்திய மதுரை திமுகவினர்
மதுரை:
சென்னையில் கருணாநிதியின் எம்.எல்.ஏ. அலுவலகம் தாக்கியதை கண்டித்து மதுரையில் போராட்டம் நடத்தியதிமுகவினர் பத்திரிக்கை புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பதற்காக ஏங்கினர்.
சென்னை-சேப்பாக்கத்தில் உள்ள கருணாநிதியின் எம்.எல்.ஏ. அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) காலை கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இது மதுரையிலும் எதிரொலித்தது. மதுரை மாநகர முன்னாள் மேயர் குழந்தைவேலு, பொன் முத்துராமலிங்கம்,மு.க.அழகிரி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர்சிலை அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சென்னையில் கருணாநிதி தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட செய்தியைக்கேள்விப்பட்டதும், இங்கிருந்த திமுகவினரும் தங்களுடைய மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தைக்கைவிட்டனர்.
பொதுவாக இது போன்ற சம்பவம் நடக்கும் போது பத்திரிக்கை போட்டா கிராபர்கள், நிருபர்களுக்கு தகவல்கொடுத்து தங்களை போட்டோ எடுக்க ஏற்பாடு செய்து விட்டுத் தான் அரசியல் கட்சியினர் வருவர்.
ஆனால் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் போட்டோகிராபர்கள் வரவில்லை. போராட்டத்தை கைவிட்டுசென்ற அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையப் பகுதிக்கு சென்றனர்.
அங்கு சென்ற பின்னர் போராட்டம் நடத்துவது போல் அந்த பகுதியிலேயே தரையில் அமர்ந்து போட்டோவுக்குபோஸ் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications