இமாம் அலியை பிடிக்கும் பணியில் 25,000 போலீசார்
சென்னை:
மதுரை-திருமங்கலத்திலிருந்து தப்பிச் சென்ற இமாம் அலியைப் பிடிப்பதற்காக தமிழகம் முழுவதும் 25,000போலீசார் ஈடுட்டுள்ளனர்.
மதுரை-திருமங்கலம் அருகே 2 அல் உம்மா தீவிரவாதிகள் அதிரடியாக மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவரானஹைதர் அலி பிடிபட்டு விட்டான்.
ஆனால் மற்றொருவனான இமாம் அலி இன்னும் சிக்கவில்லை. அவனைத் தேடும் பணி தமிழகம் முழுக்கதீவிரமாக நடந்து வருகிறது. எந்தவிதத்திலும் அவன் தமிழகத்திலிருந்து தப்பி விடாமல் தடுக்க தீவிரமானசோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இமாம் அலியைத் தேடி போலீசார் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 25,000 போலீசார் இமாம் அலியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழகப்போலீசின் அனைத்துப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் அவன் விரைவில் பிடிபடுவான் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இமாம் அலி சென்னைக்கு தப்பி வரலாம் என்று போலீஸார் உறுதியாக சந்தேகிக்கிறார்கள்.இதையடுத்து சென்னை எல்லைகளில் தீவிர சோதனையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் கடுமையான வாகனப் பரிசோதனை நடந்து வருகிறது. அனைத்துவாகனங்களும் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்ட பிறகே சென்னைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மாசான முத்து இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications