பெரம்பலூர்: கொலை வழக்கில் 9 பேருக்கு 56 ஆண்டு சிறை
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே 4 பேரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில், 9 பேருக்கு தலா 56 ஆண்டு சிறைதண்டனை விதித்து பெரம்பலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது குடும்பத்துக்கும்,அதே ஊரில் உள்ள மாணிக்கம் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
கடந்த 98ம் ஆண்டு ஜூலை மாதம் அதிகாலை பரமசிவம், இவரது மனைவி சாராதாம்பாள், மகன்கள் செல்வராஜ்,அண்ணாதுரை ஆகிய 4 பேரையும் ஓட ஓட விரட்டி நடுத்தெருவில் வெட்டி கொலை செய்த மாணிக்கமும், அவரதுஉறவினர்களும்.
இது தொடர்பாக மாணிக்கம், இவரது மகன்கள் பழனிச்சாமி, முருகானந்தம், சுருளிராஜ், உறவினர்கள்கோவிந்தராஜ், பஞ்சாட்சரம், ரவிச்சந்திரன், நாகராஜ், அன்பழகன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதிசண்முகம் விசாரித்தார்.
குற்றவாளிகள் 9 பேருக்கும், தலா 4 ஆயுள் தண்டனை (56 ஆண்டுகள்) விதித்தார். இது தவிர தலா ரூ.10,000அபராதமும், அபராதம் கட்ட தவறினால் தலா 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications