தினகரன் திவால் ஆனவரா? - அமலாக்கப் பிரிவு வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெரியகுளம் எம்.பியான டி.டி.வி. தினகரனை திவால் ஆனவர் என்று அறிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கஅனுமதி கோரி அமலாக்கப் பிரிவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் சுப்ரமணியம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

அன்னியச் செலவாணி மோசடி தொடர்பாக தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தொகையை செலுத்தத் தவறியதை தொடர்ந்து அவருக்கு திவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்தமனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தரும்படி கூறி, அம்மனுவை அவரிடமே நீதிமன்றம் திருப்பிக்கொடுத்தது.

மனுவில் உள்ள குறைபாடுகளை நீக்கி, புதிதாக தினகரன் எந்த மனுவையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை.திவால் நடவடிக்கை எடுப்பதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றே தினகரன் காலதாமதம் செய்து வருகிறார்.

எனவே திவால் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.அவரை திவால் ஆனவர் என்று அறிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கப் பிரிவினருக்கு அனுமதிஅளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்ரமணியம், மனு மீதான விசாரணையை வரும் அடுத்த திங்கள்கிழமைக்குதள்ளி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+