பூமி பூஜை: இந்து அமைப்புகளிடையே மோதல்

Subscribe to Oneindia Tamil

லக்னோ:

அயோத்தியில் வரும் 15ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அறிவித்துள்ளநிலையில் அந்த பூஜை நடக்காது என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை பல்டி அடித்துள்ளது.

அயோத்தியில் பூமி பூஜை மட்டும் நடைபெறும் என்று கூறிய வி.எச்.பி., ஆனால் கோவில் கட்ட மாட்டோம் என்றுஅறிவித்தது.

இதனால் அதிர்ந்து போன ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திர பரமஹன்ஸ், கோவில் கட்டமாட்டோம் என்று சொல்வதற்கு வி.எச்.பிக்கு அதிகாரம் இல்லை என்று கோபத்துடன் கூறினார்.

இதைத் தொடர்ந்து இந்த இரு அமைப்புகளும் "ஏறுக்கு மாறாக" தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க ஆரம்பித்தனர்.இதனால் பூமி பூஜை நடத்துவது தொடர்பாக இரு அமைப்பினரும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டுவருகின்றனர்.

வரும் 15ம் தேதி பூமி பூஜை நடந்தே தீரும். கரசேவகர்களும் காசியைச் சேர்ந்த சாதுக்களும் இந்த பூஜையில் கலந்துகொள்வார்கள் என்று வி.எச்.பி. தலைவரான அசோக் சிங்கால் நேற்று (திங்கள்கிழமை) கூறினார்.

ஆனால் இவருடைய கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட தகவலை பரமஹன்ஸ் கூறியுள்ளார். ராமர் கோவில்கட்டுமானத்திற்குத் தேவையான தூண்களை வழங்கும் நிகழ்ச்சி மட்டும் அன்று நடைபெறும் என்றும் அதைத்தடுக்க யாராலும் முடியாது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக ராமரே தன்னுடைய கனவில் தோன்றி உத்தரவிட்டதாகவும் பரமஹன்ஸ் கூறினார்.

மேலும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளவோ தடைகளை மீறவோ தாங்கள் தயாராக இல்லை என்றும்பரமஹன்ஸ் தெரிவித்தார்.

வி.எச்.பி. அமைப்பினரும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைப்பினரும் இவ்வாறு மாறி மாறி முரண்பாடானகருத்துக்களைத் தெரிவித்து மோதிக் கொண்டிருப்பதால் பூமி பூஜை நடக்குமா என்ற சந்தேகம் தற்போதுஎழுந்துள்ளது.

இதற்கிடையே இன்று நடக்கும் வி.எச்.பி. கூட்டத்தின் முடிவில் அந்த அமைப்பு பூமி பூஜை நடத்துவது தொடர்பாகதன்னுடைய இறுதியான அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+