தமிழக நலத் திட்டங்களுக்கு ரூ.5,200 கோடி: ஜெ.
சென்னை:
சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழக நலத்திட்டங்களுக்கான நிதி ரூ.6,040கோடியிலிருந்து ரூ.5,200 ஆக குறைக்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறினார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் சனிக்கிழமை தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) ஆளுநர்உரை மீதான விவாதம் நடந்தது. சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. அதனால் தான் பல திட்டங்களை ரத்து செய்துவிட்டோம்.தற்போது நலத்திட்டங்களுக்கு ரூ.5,200 கோடி மட்டுமே செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் இதே நிலை தான் உள்ளது. தமிழக அரசு மட்டும் தான் நலத் திட்டங்களுக்குசெலவிடப்படும் தொகையை குறைத்துள்ளது. திட்டங்களுக்கான செலவை குறைக்கவில்லை என்றால் மத்தியஅரசிடம் இருந்து நிதியை பெற முடியாது.
வரும் வருடங்களில் மத்திய அரசிடம் இருந்து நிறைய நிதிகளை பெறும் நிலையில் தான் தமிழகம் உள்ளது. வரிகள்மூலம் மத்திய அரசு கொடுக்க வேண்டிய ரூ.512 கோடியை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை. இதற்குகாரணம் பொருளாதார மந்தம் தான்.
2001ல் அதிமுக பதவியேற்ற போது தமிழக அரசின் நிதியில் ரூ.700 கோடி பற்றாக்குறை இருந்தது. நாங்கள் அதைபாதியாக குறைத்திருக்கிறோம் என்று ஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications