வெடிக்கிறது திமுக-பாஜக மோதல்
கோயம்புத்தூர்:
முக்கிய பிரச்சினைகளில் பாஜகவுடன் கலந்தாலோசிக்க திமுக தலைமைக்கு விருப்பம் இல்லை என்று தமிழக பாஜகதலைவர் கிருபாநிதி புகார் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. அப்போது ஆளுநர் உரைவாசிக்கத் தொடங்கியதும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். அவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள்உறுப்பினர் திருமாவளவனும் வெளிநடப்பில் கலந்து கொண்டார்.
ஆனால் கூட்டணிக் கட்சியான பாஜக இந்த வெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை. இது தமிழக அரசியலில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கோவை வந்த பா.ஜ.க. தலைவர் கிருபாநிதியிடம் கேட்கப்பட்டபோது அவர் கூறியதாவது,
வெளிநடப்புச் செய்வதற்கு முன் தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவர்களுடன் திமுக ஆலோசித்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி அவர்கள் செய்யவில்லை. திடீரென்று அவர்கள் வெளிநடப்புச் செய்தார்கள்.
எதற்காக வெளிநடப்புச் செய்கிறோம் என்பதை திமுகவினர் எங்களிடம் விளக்கியிருந்தால் அதை நாங்கள்பரிசீலித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
இதுமட்டுமல்லாமல், முக்கியப் பிரச்சினைகள் எதிலுமே எங்களுடன் திமுகவினர் ஆலோசனை செய்வதில்லை.எங்களிடம் ஆலோசனை நடத்துவதிலும் திமுகவுக்கு விருப்பமில்லை என்று உணர்கிறோம்.
இப்படி பலமுறை நடந்திருப்பதால், தமிழகத்தில் சுயேச்சையாக செயல்பட முடியுமா என்று கட்சி மேலிடத்தில்கேட்கவுள்ளோம். இருப்பினும் இது திமுகவுடனான கூட்டணிக்கு எந்தவித பாதகத்தையும் ஏற்படுத்தாது என்றுகிருபாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications