தீண்டத்தகாதவரல்ல ஜெ.: வெங்கையா நாயுடு
சென்னை:
மத்திய அமைச்சர்கள் சென்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்காமல் இருப்பதற்கு அவர் ஒன்றும்தீண்டத்தகாதவர் அல்ல என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று(செவ்வாய்க்கிழமை) கூறினார்.
வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்திருப்பதால், விரைவில்பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேரப் போகிறதா என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு சென்னையில் வெங்கையாநாயுடு கூறியதாவது:
அரசு பிரச்சனைகள் தொடர்பாகத்தான் சில அமைச்சர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
அப்படியே எந்தப் பிரச்சனையும் இல்லாவிட்டாலும், ஜெயலலிதாவைச் சந்திப்பதில் என்ன தவறு உள்ளது? அவர்என்ன தீண்டத்தகாதவரா? அல்லது அவரைச் சந்திப்பது ஒரு பாவமான செயலா?
சில அமைச்சர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்ததால் மட்டுமே பாஜக கூட்டணியில் அதிமுக இணையப் போவதாகக்கற்பனை செய்து கொள்ளக் கூடாது.
திமுகவுடனான கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. எங்கள் உறவு சுமூகமாகவே இருக்கிறது. நடைபெற இருக்கும்இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை எங்கள் கட்சி ஆதரிக்கும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்காது.புதன்கிழமை உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் அயோத்தியில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
அயோத்தி விவகாரம், குஜராத் வன்முறை சம்பவங்களை கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் தேவையில்லாமல்பெரிது படுத்தி வருகின்றன.
குஜராத் சம்பவம் தொடர்பாக அத்வானியும், குஜராத் முதல்வரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறிவருகின்றன. இந்த பிரச்சனைக்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் கோருவதற்கு எந்த வித தார்மீகஉரிமையும் இல்லை என்று வெங்கையா நாயுடு கூறினார்.












Click it and Unblock the Notifications