வாஜ்பாயைச் சந்தித்தார் உ.பி. ஆளுநர்
டெல்லி:
அயோத்தி விவகாரம் குறித்து பிரதமர் வாஜ்பாய் மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோருடன் உத்தரப்பிரதேச ஆளுநர் விஷ்ணு காந்த் சாஸ்திரி ஆலோசனை நடத்தினார்.
வரும் 15ம் தேதி அயோத்தியில் பூமி பூஜை நடத்தப்படும் என்று முதலில் கூறிய விஸ்வ ஹிந்து பரிஷத், நீதிமன்றத்தீர்ப்பு வரை காத்திருப்போம் என்று தற்போது சிறிது பின்வாங்கியுள்ளது.
இதற்கிடையே அயோத்தியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் திடீரென்று டெல்லி விரைந்த சாஸ்திரி,வாஜ்பாயைச் சந்தித்தார்.
அயோத்தியில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை குறித்து வாஜ்பாயிடம் சாஸ்திரி விளக்கமளித்தார்.
மேலும் அத்வானியையும் சந்தித்த சாஸ்திரி, அயோத்தி நிலவரம் குறித்தும் அங்குள்ள பாதுகாப்பு குறித்தும்அவரிடம் எடுத்துக் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சாஸ்திரி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படிதான் பூமி பூஜை நடத்தப்படும் என்றுதெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு வாஜ்பாயை இப்போதுதான் அவர்சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமி பூஜை - நாளை முக்கிய விசாரணை:
இதற்கிடையே அயோத்தியில் வி.எச்.பியால் பூமி பூஜை நடத்த முடியுமா முடியாதா என்பது குறித்த மனு நாளைவிசாரணைக்கு வருகிறது.
இந்த விசாரணையை வி.எச்.பி. அமைப்பினர், வாஜ்பாய் ஆகியோர் மட்டுமல்லாமல் இந்திய மக்களே ஆவலுடன்எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை பூமி பூஜைக்கு அனுமதிக்கப் போவதில்லை என்று நேற்று வாஜ்பாய்அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி செல்ல அனுமதி கோரி மனு:
இந்நிலையில் அயோத்திக்கு சென்று வழிபடுவதற்கு அனுமதி வேண்டும் என்று கோரி ரவீந்தர் குப்தா என்ற ஒருதொழிலதிபரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தன்னையும் தன் குடும்பத்தினரையும் கடந்த 7ம் தேதி அயோத்திக்குள் செல்ல அனுமதிக்காததன் மூலம் அடிப்படைஉரிமைகளைத் தர உத்தரப் பிரதேச அரசு மறுத்துள்ளதுஎன்று தன் மனுவில் குப்தா கூறியுள்ளார்.
அயோத்தி முழுவதும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதால், தன்னையும் தன் குடும்பத்தினரையும்அயோத்திக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் குப்தா கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications