அயோத்தி: தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் - வி.எச்.பி.
அயோத்தி:
பூமி பூஜை நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் வரை காத்திருப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத்(வி.எச்.பி.) அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் கூறினார்.
வரும் 15ம் தேதி அயோத்தியில் பூமி பூஜை நடத்தப்படும் என்று வி.எச்.பி. சமீபத்தில் அறிவித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் அனுமதிக்காத வரையில் அங்கு பூமி பூஜை நடத்த அரசு அனுமதிக்காது என்று பிரதமர் வாஜ்பாய்கூறிவிட்டார்.
இதற்கிடையே அயோத்தியில் பூமி பூஜை நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக முஸ்லிம் சட்டவாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அசோக் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:
பூமி பூஜை நடத்துவது குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க தயார். எங்களுக்கு சாதகமாகத்தான்தீர்ப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
தீர்ப்பு சாதகமாக இல்லையென்றால், ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திர பரமஹன்ஸ்தலைமையில் கோவில் கட்டுவதற்கான தூண்களை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடுவார்.
அப்படி தூண்களை எடுத்துச் செல்லும்போது எங்களைத் தடுத்து கைது செய்தால், சிறை செல்லவும் தயாராகஉள்ளோம்.
நாங்கள் அரசுடன் மோத விரும்பவில்லை. மார்ச் 15ம் தேதி கோவில் கட்டுவதற்கான ஏதாவது ஒரு பணி நடக்கவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.
அயோத்தியில் கரசேவகர்களை தடுத்து நிறுத்துவது மற்றும் அயோத்தியில் சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பதுதேவையில்லாத விபரீதங்களை தான் தரும்.
இந்த விஷயத்தில் பிரதமருக்கு உள்ள நெருக்கடி எனக்கு புரிகிறது. அயோத்தி பிரச்சனை தீர ஏதாவது ஒரு வழிபிறக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அசோக் சிங்கால் கூறினார்.
அகமதாபாத்தில் ஊரடங்கு நீக்கம்:
இதற்கிடையே அகமதாபாத்தில் ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த 15 நாட்களாக வன்முறையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து, 300க்கும் மேற்பட்டஉயிர்களைப் பலிகொடுத்த அகமதாபாத், இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
சாலைகளில் மக்கள் இன்று சாதாரணமாக நடமாட ஆரம்பித்தனர். போக்குவரத்தும் வழக்கம்போல்நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications