சென்னையில் இன்னொரு "செக்ஸ்" டாக்டர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் இன்னொரு "செக்ஸ்" டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வக்கிர புத்தி மற்றும் வரதட்சணைகொடுமை குறித்து அவரது டாக்டர் மனைவியே போலீஸில் புகார் கொடுத்ததையடுத்து அந்த டாக்டர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் டாக்டர் ஜெகதீஸ்வர். இவரது மனைவி கலைவாணி. இவரும் ஒரு டாக்டர்.இவர்களுக்கு விஸ்வா மற்றும் அஸ்வத் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

வேலூரில் படித்த டாக்டர் ஜெகதீஸ்வர் சென்னையில் பல இடங்களில் கிளினிக் வைத்து நடத்தியுள்ளார். கடைசியாகராமாபுரம் பகுதியில் கிளினிக் வைத்திருந்தார்.

இந்நிலையில் டாக்டரின் கலைவாணி கடந்த திங்கள்கிழமை இரவு வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குஅழுதவாறு வந்தார். அவரது தலை கலைந்திருந்தது. கன்னம் வீங்கியிருந்தது.

காவல் நிலையத்திற்கு வந்த டாக்டர் கலைவாணி தனது கணவர் வரதட்சணை கேட்டுக்கொடுமைப்படுத்துவதாகவும், கொடுக்காவிட்டால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விடுவதாக மிரட்டுவதாகவும்அழுதவாறு கூறினார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் டாக்டர் ஜெகதீஸ்வரைக் கைது செய்தனர்.

ஜெகதீஸ்வர் குறித்து டாக்டர் கலைவாணி திடுக்கிடும் புகார்களைக் கூறியுள்ளார். அவர் கூறுகையில்,

எனது கணவர் செக்ஸ் வெறி பிடித்தவர். கிளினிக்கிற்கு வரும் ஒரு பெண்ணையும் விட மாட்டார். அவர்களுக்குஉடல்நலம் சரியாகி விட்டாலும் கூட மறுபடியும் கிளினிக்கிற்கு வரச் சொல்வார்.

தேவையே இல்லாமல் அவர்களது உடல்களைத் தொட்டுத் தொட்டுப் பேசுவார். அவரிடம் பல குடும்பப் பெண்கள்மானத்தை இழந்துள்ளனர். பலர் கற்பையும் இழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குர்ஷித் என்ற பெண்ணிடம், தான் ஒரு அநாதை என்று சொல்லி எங்களுக்குத்தெயாமலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஜெகதீஸ்வர் குறித்துத் தெரிய வந்ததும் அந்தப் பெண்அவரை விட்டுப் பிந்து சென்று விட்டார்.

பின்னர் ராமாபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஜெகதீஸ்வருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவரிடம் தனக்குத்திருமணம் ஆகவில்லை என்று கூறியுள்ளார்.

ஆபாச சிடிக்கள் பார்ப்பதை சமீபத்தில் வழக்கமாக்கிக் கொண்டார். வீட்டுக்கு அவற்றை எடுத்து வந்து என் முன்பேஅதைப் பார்ப்பார். அந்தப் படங்களில் வருபவை குறித்து அசிங்கமாக கமென்ட்டும் அடிப்பார்.

டிவி பார்க்கும் போது எந்தப் பெண் அதில் வந்தாலும் அவர்கள் குறித்து படு அசிங்கமாக கருத்துக் கூறுவார்.

இவற்றை என் குழந்தைகள் முன்பும் அவர் பேசியதால் நான் பொறுமையிழந்தேன். எனது குழந்தைகளுக்காகஅவரைப் பொறுத்துக் கொண்ட நான் இப்போது அவராலேயே எனது குழந்தைகள் வாழ்க்கை பாழாகி விடும் என்றுபயந்ததால் போலீஸில் புகார் கொடுத்தேன் என்று கூறினார் கலைவாணி.

சமீபத்தில்தான் செக்ஸ் டாக்டர் பிரகாஷ் பிடிபட்டு தமிழகத்தையே உலுக்கினார். இப்போது அதே ரகத்தில்இன்னொரு டாக்டர் பிடிபட்டுள்ளார். இவர் மூலம் என்னென்ன திடுக்கிடும் தகவல்கள் வரப் போகிறதோதெரியவில்லை.

கைதான டாக்டர் மீது வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியது, கொலை முயற்சி, மிரட்டல் ஆகிய பிரிவுகளில்வழக்குகள் போடப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+