சென்னை-கொழும்பு விமானத்தில் ஹெராயின் பறிமுதல்: இலங்கை மூதாட்டி கைது
சென்னை:
இலங்கையைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி ரூ.1. 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளுடன் சென்னைவிமான நிலையத்தில் பிடிபட்டார்.
இலங்கையைச் சேர்ந்தவர் சுமனா. இவருக்கு வயது 62. நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னையிலிருந்து இலங்கைசெல்லும் விமானத்தில் ஏறினார்.
விமானம் கிளம்பும் நேரத்தில் விமான நிலைய போலீஸாருக்கு, சுமனா என்ற பெண் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்திச் செல்வதாகத் தகவல் வந்தது. இதையடுத்து விமான நிலைய போதைப் பொருள் தடுப்புஅதிகாரிகள் விமானத்தை கிளம்ப விடாமல் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் விமானத்திற்குள் தீவிர சோதனை நடத்தினர். சுமனாவைக் கண்டுபிடித்து அவரையும், அவர் வைத்திருந்தசூட்கேஸ்களையும் கீழே இறக்கினர். அப்போது போதைப் பொருள் கடத்துவதை சுமனா ஒத்துக் கொண்டார்.
ஆறு பீர் பாட்டில்களில் பாலிதீன் பைகளில் ஹெராயின் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இரண்டு ரெக்ஸின் சூட்கேஸ்களில் இந்த பீர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து சுமனாவைபோலீஸார் கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்த ஒருவர், அதுவும் வயதான பாட்டி ஒருவர், போதைப் பொருள் கடத்தியதாக கைதாவதுஇதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications