சென்னையில் சட்ட கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி சென்னை சட்டக் கல்லூரி விடுதிக்குள் புகுந்து அங்கிருந்து மாணவர்களைப்போலீசார் பயங்கரமாகத் தாக்கினர். மேலும் 35 மாணவர்கள் மீது வழக்குகளையும் தொடர்ந்தனர்.

இதைக் கண்டித்து அப்போதே நீண்ட நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்த மாணவர்கள், சம்பந்தப்பட்டவழக்குகள் வாபஸ் பெறப்படும் என்ற அரசின் உறுதி மொழியை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மீண்டும் தங்கள் போராட்டத்தை சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடங்கினர்.சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள், நேற்று தங்கள் தலைகளைமொட்டையடித்தும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இன்றும் போராட்டத்தைத் தொடர்ந்த மாணவர்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களைப் போலீசார் கலைந்து போகச் செய்தனர். இதனால் மாணவர்களுக்கும்போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் தங்களது போராட்டம் தொடரும் என்றுமாணவர்கள் அறிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+