Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்.எல்.சியை தனியாரிடம் தாரை வார்ப்பதா? - இளங்கோவன் கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியைத் தடுப்பதற்காக பெரும் அளவில்போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் தாரை வார்க்க மத்திய அரசு மறைமுகமாக பல நடவடிக்கைகளைஎடுத்த வருகிறது. இது தொழிலாளர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.391 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போது ரூ.4195 கோடி அளவுக்கு லாபம் ஈட்டித்தந்துள்ளது. இந்தியாவிலேயே நல்ல லாபத்துடன் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனங்களிலேயே முக்கியமானதுஇது.

தனியார் மயமாக்கப்படலாம் என்ற மத்திய அரசு நிறுவனங்களின் பட்டியலில் நெய்வேலி நிறுவனம் இல்லை. இந்தநிலையில் நெய்வேலி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். மின்சாரக்கட்டணமும் கடுமையாக அதிகரிக்கும்.

நெய்வேலி நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால்காங்கிரஸ் சார்பில் பெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அவ்வறிக்கையில் இளங்கோவன்கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+