விஷம் குடிப்பேன்: ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் மிரட்டல்
அயோத்தி:
அயோத்தியில் நாளை (வெள்ளிக்கிழமை) தூண் தானம் செய்வதற்குத் தடை விதித்தால் விஷம் குடித்து தற்கொலைசெய்து கொள்வேன் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திர பரமஹம்ஸ் மிரட்டியுள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் தலைமையில் இன்று மாலை சாதுக்களின் கூட்டம் நடந்தது. தூண் தானம் அளிக்கும்நிகழ்ச்சியை நாளைக்குக் கட்டாயம் நடத்தியே தீருவோம் என்று இக்கூட்டத்தில் அனைத்து சாதுக்களும்சாமியார்களும் திட்டவட்டத்துடன் தெரிவித்தனர்.
கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களிடம் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் பேசுகையில்,
ஏற்கனவே நாங்கள் திட்டமிட்ட படி நாளை தூண் தானம் அளிக்கும் நிகழ்ச்சியை நடத்துவோம்.
இதைத் தடுத்தால், நாங்கள் அமைதியாக சிறை செல்வதற்கும் தயாராகவே உள்ளோம் என்று கூறினார்.
அதே நேரத்தில், நாங்கள் தூண் தானம் அளிக்கும் நிகழ்ச்சியை யாராவது தடுத்தால் உடனடியாக நான் விஷம்குடித்துத் தற்கொலை செய்து கொள்வேன் என்று பரமஹம்ஸ் மிரட்டல் விடுத்தார்.
நாளை பிற்பகல் 2.15 மணிக்கு நான்கு வேத பிராமணர்களுடன் தூணைச் சுமந்து கொண்டு சென்று பைசாபாத்டிவிஷனல் கமிஷனரிடம் தூணைக் கொடுப்பேன். அப்போது போலீசார் என்னைத் தடுத்தால், அடுத்த நிமிடமேவிஷத்தைக் குடித்து இறந்து விடுவேன் என்றும் பரமஹம்ஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications