ஜெ. உரையுடன் தமிழக சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை:
ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் உரையுடன் தமிழக சட்டசபை இன்று(வெள்ளிக்கிழமை) மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த சனிக்கிழமை (மார்ச் 9) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பின்னர்கடந்த திங்கள் முதல் இன்று வரை ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடந்தன.
இதையடுத்து இன்று ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் உரையை ஜெயலலிதா வாசித்தார். அப்போது அவர்கூறியதாவது:
பல்வேறு அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் எனக்கு எதிராகப் போடப்பட்ட வழக்குகளையும் கண்டு நான் அஞ்சிஒதுங்கவோ கலங்கி விடவோ இல்லை.
ஆனால் இத்தனை சோதனைகளையும் நான் கடந்து வந்த பிறகு தமிழக மக்கள் என்னை மீண்டும் இந்த முதல்வர்நாற்காலியில் உட்கார வைத்து விட்டனர்.
தமிழக மக்களின் இந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். என் மீது மக்கள் கொண்டுள்ளநம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக தமிழகத்தை நான் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றிக்காட்டுவேன். அதுதான் என் வாழ்வின் நோக்கம் என்றார் ஜெயலலிதா.
இதையடுத்து சபையை ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அவைத் தலைவரும் நிதியமைச்சருமான பொன்னையன்முன் மொழிய, மறு தேதி குறிப்பிடப்படாமல் தமிழக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
திமுக வெளிநடப்பு:
முன்னதாக அரசு போக்குவரத்து நிறுவனத்தின் சீரழிவிற்கு தான்தான் ஆதாரம் என்று ஜெயலலிதா கூறினாரேஎங்கே அது என்று கேட்டு முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.
முதல்வர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, அதை இடைமறிப்பது அநாகரிகமற்ற செயல் என்று கூறிபொன்முடியை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் காளிமுத்து கேட்டுக் கொண்டார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் பொன்முடி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததார்.
இதையடுத்து அவருக்குப் பதிலளிக்கும் விதத்தில் பேசிய ஜெயலலிதா, திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகப்போக்குவரத்துக் கழகம் குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல பொன்முடியின் கையில் சிக்கிச்சின்னாபின்னமாகச் சீரழிந்து விட்டது என்று கூறினார்.
இதை வன்மையாக மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன், இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறினார். இதையடுத்து அன்பழகன் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையிலிருந்துவெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications