அயோத்தியில் ஊர்வலம் தொடங்கியது.
அயோத்தி:
அயோத்தியில் பிரச்சனைக்குறிய இடத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ராம்கோட் என்ற பகுதியில் உள்ளஹனுமான்கடி என்ற இடத்தில் சிறப்புப் பூஜை நடக்கவுள்ளது.
கோவில் கட்டுவதற்காக தூண்கள் செய்யும் பணி நடந்து வரும் கர்சேவக்புரத்தில் இருந்து விஸ்வ ஹிந்து பரிஷத்தலைவர் அசோக் சிங்கல் தலைமையில் 500 கர சேவகர்களும், ராமஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவர்ராமச்சந்திர பரமஹம்சும் ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
ஊர்வலம் திட்டமிட்ட நேரத்தைவிட தாமதமாகப் புறப்பட்டது.
கோவில் கட்டும் பொருள்கள், தூண்கள் ஆகியவையும் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
தலைவர்கள் இருவரும் கார்களில் சென்றனர். 500 பேருக்கு 2,500 போலீசார் பாதுகாப்பாகச் சென்றனர்.பரமஹம்சின் காரைச் சுற்றி காவல்துறை உயர் அதிகாரிகளும், கமாண்டோக்களும் நடந்து வந்தனர்.
ஊர்வலம் நின்று நின்று மிக மெதுவாகப் போய்க் கொண்டுள்ளது.
அங்கு மாலை வரை பூஜை நடக்கும். தூண் தானம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கும்.
இந்த நிகழ்ச்சியில் இந்த 500 பேர் தவிர வேறு யாரும் பங்கேற்க அனுமதி தரப்படமாட்டாது என்று போலீசார்தெரிவித்துவிட்டனர்.
ஹனுமன்கடியில் கோவிலுக்கான பைசாபாத் மாவட்ட ஆட்சியரும் அயோத்தி நில கண்காணிப்பு அதிகாரியுமானஆர்.கே. குப்தா பெற்றுக் கொள்வார். அப்போது மத்திய கேபினட் செக்ரட்டரியேட் அதிகாரி சத்ருகன சிங்பார்வையாளராக உடன் இருப்பார்.
முன்னதாக குப்தாவிடம் தூணைத் தர மாட்டேன், மத்திய அரசு அதிகாரி வந்தால் தான் தருவேன் என்று பரமஹம்ஸ்பிடிவாதம் பிடித்ததால் அவரை மத்திய அரசு சிறப்பு விமானத்தில் அனுப்பி வைத்தது. அவர் இந்த பூஜை,ஊர்வலம், தூண் வழங்கும் நிகழ்ச்சியை நேரில் கண்காணித்து வருகிறார். ஆனால், தூணை அவர் வாங்க மாட்டார்என்று மத்திய அரசு இப்போது தெரிவித்துவிட்டது.
குப்தா தான் இந்த பிரச்சனைக்குறிய நிலத்துக்கு பொறுப்பு அதிகாரி என்பதால் அவரிடம் தான் தூணைத் தரவேண்டும் என மத்திய அரசு கூறிவிட்டது.
உள்துறை அமைச்சர் அத்வானி இன்றும் இருமுறை தொலைபேசியில் பரமஹம்சிடம் பேசினார்.
கரசேவகர்கள் விடுதலை:
இந் நிலையில் காலையில் அயோத்தியில் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்ட 250 கர சேவகர்களும் பகல் 2மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களை அயோத்திக்கு வெளியே ஓரிடத்தில் போலீசார் கொண்டு போய் இறக்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications