தடம் புரண்டது ஹெளரா-சென்னை எக்ஸ்பிரஸ்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்க்பிரஸ் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்குநெல்லூர் அருகே தடம் புரண்டது.
ஹெளராவிலிருந்து நேற்று பிற்பகல் 1.25க்குக் கிளம்பி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த இந்த ரயில், ஆந்திரமாநிலம் நெல்லூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று தடம்புரண்டது.
இச்சம்பவத்தில் இந்த ரயிலின் ஏழு பெட்டிகள் சேதமடைந்தன. குறைந்தது 20 பேர் லேசான காயமடைந்தனர் என்றுரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த அனைவரும் நெல்லூரி ரயில்வே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தண்டவாளத்தில் ஏற்பட்ட சிறு விரிசல் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications