குஜராத்தில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி
அகமதாபாத்:
அயோத்தியில் நேற்று நடந்த தூண் வழங்கும் நிகழ்ச்சிக்கு எதிராக குஜராத்தில் நடந்த வன்முறையில் 3 பேர்கொல்லப்பட்டனர்.
அகமதாபாத்தில் நேற்று காங்கிரஸ் எம்.பி பிரவீன் குமாரின் உறவினர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பலர்இந்த வன்முறையில் காயமடைந்தனர்.
அதே போல இன்று அதிகாலையில் மீண்டும் வன்முறை வெடித்தது. கல்வீச்சிலும், வன்முறையிலும் ஈடுபட்டகும்பலைக் கலைக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் இறந்தார். 9 பேர் காயமடைந்தனர்.
வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போலீஸ் காவலில் இறந்தார்.
இதையடுத்து மீண்டும் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் பாராட்டு:
இந் நிலையில் அயோத்தியில் நேற்று தூண் தான நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்தக் காட்டிய மாநிலஆளுநருக்கும் மாவட்ட நிர்வாகத்தினருக்கும் பிரதமர் வாஜ்பாய் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications