விளையும் பயிர் முளையிலே தெரியும்: கருணாநிதி கருத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாநிலம் முழுவதும் திமகவினரின் இல்லங்களில் போலீசார் அதிரடி ரெய்ட் நடத்தியது குறித்து கருணாநிதியிடம்கருத்துக் கேட்டபோது விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று பதிலளித்தார்.
ரெய்ட் நடக்கும விவரம் வெளியானபோது கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் இருந்தார். தனது வீட்டில் ரெய்ட்நடப்பதை கருணாநிதியை நேரில் சந்தித்துக் கூறினார் முன்னாள் அமைச்சர் பொன்முடி. அவரிடம் விளக்கம் கேட்டகருணாநிதி மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய திமுக புள்ளிகளுடனும் தொலைபேசியில் பேசினார்.
பின்னர் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த அரசு அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதற்கு ஒரு சாம்பிள் தான் இது. விளையும் பயிர் முளையிலேயேதெரியும் என்பார்களே அது மாதிரி. ஆனால், இந்த மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது. எதையும்சந்திப்போம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications