ஒரிஸ்ஸா சட்டசபையை சூறையாடிய வி.எச்.பி.
புவனேஸ்வர்:
ஒரிஸ்ஸா சட்டமன்றத்தை இன்று விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் தொண்டர்கள் சூறையாடினர்.
நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் அயோத்தியில் வி.எச்.பி. நடத்திய தூண் தான நிகழ்ச்சியை பல கட்சிஉறுப்பினர்களும் கண்டித்துப் பேசினர்.
இந் நிலையில் இன்று சட்டமன்றத்துக்கு அருகே வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் தொண்டர்கள் யாகம் நடத்தினர்.இதன் பின்னர் இவர்களில் 500 பேர் மனு கொடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு சட்டசபை வளாகத்துக்குள்நுழைந்தனர்.
ஆனால், இவர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். சட்டசபை வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர். இதில் போலீஸ் வாகனங்களும் தப்பவில்லை.
தொடர்ந்து சட்டசபைக்குள்ளே நுழைந்ச இந்தக் கும்பல் மேஜை நாற்காலிகளை உடைத்தெறிந்தனர். ஜன்னல்களைநொறுக்கினர். வழியில் இருந்த பொருள்களையெல்லாம் உடைத்தனர்.
பாதுகாப்புக்கு நூற்றுக்கணக்கான போலீசார் நின்றிருந்தும் கூட அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.
போலீசார் சுதாரிப்பதற்குள் சட்டசபைக்குள் நுழைந்துவிட்ட இந்தக் கும்பல் சபையை சூறையாடியது. சுமார்அரைமணி நேரம் இந்த சூறையாடல் தொடர்ந்தது. இதன் பின்னர் தான் கும்பலை போலீசாரால் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வர முடிந்தது.
கும்பல் உள்ளே நுழைந்தபோது சட்டசபைக் கூட்டம் உணவு இடைவேளைக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.இதனால் பெரும்பாலான அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் வெளியில் சென்றிருந்தனர்.
சில எம்.எல்.ஏக்களும் பத்திரிக்கையாளர்களும் தான் உள்ளே இருந்தனர். அவர்கள் இந்தக் கும்பலிடம் இருந்துஉயிர் தப்பி சிதறி ஓடினர்.
குஜராத் முழுவதும் மீண்டும் கலவரம்:
அயோத்தியில் தூண் தான நிகழ்ச்சியையொட்டி குஜராத்திலும் பல இடங்களில் சிறப்புப் பூஜைகள் நடந்தன.இதையடுத்து மாநிலம் முழுவதும் மீண்டும் கலவரமும், தீவைப்பும் நடந்து வருகிறது.
நகரில் பல வீடுகள் எரிந்தவண்ணம் உள்ளன. போலீசார் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தி வருகின்றனர்.
நேற்று முதல் தொடங்கிய புதிய வன்முறையில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் தான் இங்குவன்முறைகளில் 700 பேர் வரை பலியாயினர்.
மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் குஜராத்தின் பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
வி.எச்.பிக்கு முஸ்லீம்கள் பாராட்டு:
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து சர்ச்சைக்குரிய இடத்தில் புகாமல் வெளியிலேயே தூண் தானநிகழ்ச்சியை நடத்திய விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு பாபர் மசூதிக் கமிட்டி நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications