நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்: கருணாநிதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தமிழக அரசு மூடியதற்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று(திங்கள்கிழமை) கடும் கண்டனம் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட திடீர் மழை வெள்ளம் காரணமாகப் பயிர்களைப் பறிகொடுத்த விவசாயிகள்,நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்ட செய்தியால் தங்களுடைய வாழ்க்கையே பதராகிப் போய்விட்டஅதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

கிணற்றில் விழுந்தவன் தலையில் கல்லைப் போட்டது போலத்தான் தமிழக அரசின் இந்த அறிவிப்பு உள்ளது.

கடந்த ஆண்டு திமுக ஆட்சியின்போது 15 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போதுஏழரை லட்சம் டன் நெல்தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் "ஊழல் ஊழல்" என்று கொக்கரிப்பவர்கள், காவிரி டெல்டா விவசாயிகளின் துயரைத்துடைப்பதற்குத் தயாராக இல்லை.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்என்று கருணாநிதி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+