வி.எச்.பி. தலைவர் 2வது நாளாக உண்ணாவிரதம்
அயோத்தி:
அயோத்தியில் கர சேவகர்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின்தலைவர் அசோக் சிங்கால் இன்று (திங்கள்கிழமை) 2வது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அயோத்தியில் தூண் தானம் வழங்கும் நிகழ்ச்சி முடிந்து விட்டதால் அங்கு தற்போது பதற்றம் எதுவும் இல்லைஎன்று கூறும் சிங்கால், இதனால் அங்குள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களைத் தடுக்கக் கூடாது என்றும்கோரினார்.
நேற்று பகல் 12.45 மணிக்கு திடீரென்று உண்ணாவிரதத்தைத் தொடங்கிய சிங்கால், தன்னுடைய கோரிக்கையில்இன்னும் பிடிவாதமாக இருந்து வருகிறார்.
தற்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வி.எச்.பி. வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும் அவருடையஉடல்நலம் சீராகத்தான் உள்ளது என்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
"வி.எச்.பியை தடை செய்ய வேண்டும்"
இதற்கிடையே, ஒரிசா சட்டசபையைத் தாக்கிய வி.எச்.பி., பஜ்ரங் தள் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும்என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், சமதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளகட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த சனிக்கிழமை ஒரிசா சட்டசபைக்குள் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பினர் நுழைந்து தாக்குதல்நடத்தினர். இந்த தாக்குதலில் சட்டசபையில் சில இடங்கள் சேதமடைந்தன.
இது குறித்து இன்று மக்களவையில் விவாதிக்கப்பட்டது. எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாமல், தேசிய ஜனநாயககூட்டணியில் உள்ள சில கட்சிகளும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளன. ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்தடி.பி.யாதவ் பேசுகையில்,
மத ஒற்றுமை குலைக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வி.எச்.பி., பஜ்ரங்தள் அமைப்புகள் ஒரிசாசட்டசபையை தாக்கியது ஜனநாயகத்தை குலைப்பது போல் உள்ளது.
இந்த இரு அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்று யாதவ் கூறினார்.
இதே போல் சமதா கட்சியை சேர்ந்த பிரபுநாத் சிங் பேசுகையில், பொடோ சட்டத்தின் மூலம் இந்த இருஅமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்று கூறினார்.
இந்த அமைப்புகளின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்தநிடீஷ் சென்குப்தாவும் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications