என்.எல்.சி. ஊழியர்கள் ஒருநாள் ஸ்டிரைக்: தமிழகம் இருளில் மூழ்குமா?
நெய்வேலி:
நெய்வேலி அனல்மின் நிறுவனம் (என்.எல்.சி.) தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து அதன் ஊழியர்கள் இன்று(திங்கள்கிழமை) இரவு முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
என்.எல்.சி. நிறுவனம் விரைவில் தனியார் மயமாக்கப்படும் என்று கசிந்த தகவலையடுத்து, அதை எதிர்த்துஅந்நிறுவன ஊழியர்கள் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
அதன்படி முதற்கட்ட நடவடிக்கையாக இன்று இரவு 10 மணி முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்செய்வதென முடிவு செய்துள்ளனர்.
இதனால் இன்றிரவு எந்த பாதிப்பும் இல்லாவிட்டாலும், நாளை காலையிலிருந்து மின் உற்பத்தி பாதிக்கப்படும்என்று தெரிகிறது.
இதையடுத்து நாளை காலை முதல் மின் சப்ளை செய்வதில் பாதிப்பு ஏற்படலாம். நாளை இரவு வரை இவர்கள்வேலைநிறுத்தம் தொடர்வதால், நாளை மாலையிலிருந்தே தமிழகம் இருளில் மூழ்கி விடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
என்.எல்.சி. ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, நிலக்கரி தோண்டி எடுக்கும் பணியும் இன்று இரவு முதல்பாதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications