சசிகலா உறவினரை உதறினார் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தோழி சசிகலாவின் உறவினர் மகாதேவனுக்கும், அதிமுகவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும்,அவருடைய கோரிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் செவி சாய்க்க வேண்டாம் என்றும் முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.

சசிகலாவின் உறவினர் கே.வி.மகாதேவன். அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய புள்ளிகள் வரிசையில்மகாதவேனும் இடம் பெற்றிருந்தார்.

ஜெயலலிதாவின் ஆடிட்டராக இருந்த ராஜசேகரன் கடந்த 1999ம் ஆண்டு தாக்கப்பட்டார். போயஸ் தோட்டத்தில்வைத்து ஜெயலலிதா, சசிகலா மற்றும் மகாதேவன் ஆகியோர் தாக்கியதாக அப்போது கூறப்பட்டது.

இதில் சசிகலா தன்னை செருப்பால் அடித்ததாகவும், மகாதேவன் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் ராஜசேகரன்கூறினார்.

இந்த நிலையில் மகாதேவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று ஜெயலலிதா அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மகாதேவனுடனான தொடர்பை ஒரு வருடத்திற்கு முன்பே துண்டித்து விட்டேன். எனது போயஸ் தோட்டஇல்லத்திற்கு அவர் வரக் கூடாது என்றும் தடை போட்டுள்ளேன்.

இருப்பினும் தொடர்ந்து எனது பெயரைப் பயன்படுத்தி தனக்கு சாதகமாக செயல்படுமாறு அரசு அதிகாரிகளையும்,போலீஸ் அதிகாரிகளையும் மகாதேவன் நிர்பந்தப்படுத்தி வருவதாகத் தெரிகிறது.

அவரது மிரட்டலுக்கு அதிகாரிகள் யாரும் பயப்பட வேண்டாம். அவரது கோரிக்கை எதற்கும் செவிசாய்க்கவும்வேண்டாம்.

மகாதேவனுடன் தொடர்பு வைத்திருக்கும், அவருக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவால் தடை விதிக்கப்பட்டுள்ள சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாவது நபர் மகாதேவன் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சுதாகரனை தனது வளர்ப்பு மகன் இல்லையென்று ஜெயலலிதா கூறி விட்டார். தற்போதுமகாதேவனுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+