""வறுமைக் கோட்டுக்கு கீழேதான் வாழ்கிறேன்"": மாஜி திமுக அமைச்சர்
மதுரை:
நான் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிறேன். பினாமி பெயரில் எனக்கு சொத்துக்கள் இருப்பதாக நிரூபித்தால்,தூக்குதண்டனை கொடுத்தாலும் ஏற்கத் தயார் என்று முன்னாள திமுக அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ்கூறியுள்ளார்.
முன்னாள் திமுக அமைச்சர்கள், திமுக பிரமுகர்கள் வீட்டில் கடந்த 3 நாட்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைநடத்தி வருகின்றனர். இதில் சமயநல்லூர் செல்வராஜூம் அடக்கம்.
நேற்று தன் வீட்டில் சுமார் ஐந்தரை மணி நேரம் சோதனை நடந்தது குறித்து செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஆதி திராவிடர்களின் நலத்துறை அமைச்சராக இருந்தேன். இப்போதும்வறுமைக் கோட்டுக்கு கீழே தான் வாழ்ந்து கொண்டு வாடிக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் இருப்பதாக நிரூபித்தால் தூக்கு தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயார்.
முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த போது நடந்து சென்றேன். இப்போது டவுன் பஸ்ஸில் செல்கிறேன். முன்னாள்எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் இலவச பாஸில் தான் பஸ்ஸில் செல்கிறேன்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் முன்னாள் அமைச்சர்கள் பட்டியலில் நிரந்தர இடம் பிடித்தவன் நான். எனக்குசொத்துக்கள் இருப்பதாக நிரூபித்தால் அரசியில் வாழ்வை இழந்து விட தயாராக இருக்கிறேன் என்று செல்வராஜ்கூறினார்.












Click it and Unblock the Notifications